Crime
பாவம் அந்த பொண்ணு ...நள்ளிரவில் வேனில் ஏற்றிச் சென்று
காக்கிச் சட்டையின் கொடூர முகம்! 17 வயது சிறுமியை நடுநிசியில் வேனில் கடத்தி கிணற்றடியில் நடந்த கூட்டுச் சீரழிவு!
விழுப்புரம்:

நள்ளிரவில் கதவைத் தட்டிய காவல் வாகனம்:
1993-ஆம் ஆண்டு ஜூலை 29 நள்ளிரவு 11 மணியளவில், கடலூர் மாவட்டம் சித்திரசூர் கிராமத்திற்குள் பாண்டிச்சேரி காவல்துறையின் வாகனம் ஒன்று வந்து நின்றது. வேனில் வந்த 6 காவலர்கள், திருட்டு வழக்க ஒன்றில் தொடர்புடைய வெள்ளையன் என்பவரைப் பற்றி விசாரிப்பதற்காக, அவரது உறவினரான 17 வயது சிறுமி விஜயாவின் சித்தி வீட்டின் கதவைத் தட்டினர். "விசாரணைக்காகச் சிறுமியை அழைத்துச் செல்கிறோம்" என்று கூறி, எதிர்ப்பையும் மீறி பலவந்தமாக நள்ளிரவில் அந்தச் சிறுமியை வேனில் ஏற்றிச் சென்றனர்.
ஒரே வேனில் பெற்றோர்... ஆனால் அறியாத சோகம்:
சிறுமியைக் கூட்டிச் சென்ற காவலர்கள், வழியில் விஜயாவின் பெற்றோரையும் வேனின் பின்பகுதியில் ஏற்றிக் கொண்டனர். ஆனால், வேனின் முன்பகுதியில் அமர வைக்கப்பட்டிருந்த சிறுமிக்கும், பின்பகுதியில் ஏறிய பெற்றோர் இருவருக்கும் தாங்கள் ஒரே வாகனத்தில் தான் பயணிக்கிறோம் என்பது கூடத் தெரியாதவாறு காவல்துறையினர் மறைத்து நாடகமாடினர்.
ஆள் நடமாட்டமில்லாத கிணற்றடியில் அரங்கேறிய கொடுமை:
விழுப்புரம் மாவட்டம் அத்தியூர் அருகே உள்ள மின்சாரம் மற்றும் ஆள் நடமாட்டமில்லாத தனிமையான கிணற்றடிக்கு வேனை ஓட்டிச் சென்றனர். பெற்றோரை வேனிலேயே இருக்க வைத்துவிட்டு, 5 காவலர்கள் சேர்ந்து 17 வயது விஜயாவை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். சட்டத்தையும் பொதுமக்களையும் பாதுகாக்க வேண்டிய அந்த காக்கிச் சட்டைகள், அந்தச் சிறுமியின் கதறலையும் பொருட்படுத்தாமல் மாற்றி மாற்றி கொடூரமான முறையில் கூட்டுச் சீரழிவில் ஈடுபட்டனர். பின்னர் எஞ்சியிருந்த மற்றொரு காவலரும் சென்று தனது கொடூர ஆசையைத் தீர்த்துக் கொண்டார்.
ரத்தக் காயங்களுடன் தவித்த சிறுமி & நீண்ட சட்டப் போராட்டம்:
சம்பவம் முடிந்து அதிகாலையில் சிறுமியை வீட்டுக்குச் செல்லும் வழியில் வீசிவிட்டு, "வெளியில் சொன்னால் குடும்பத்தையே அழித்து விடுவோம்" என மிரட்டிச் சென்றனர். உடலெங்கும் ரத்தக் காயங்களுடன் தவழ்ந்து வந்த சிறுமி, நடந்த கொடுமைகளைக் கூறியதும் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். ஆரம்பத்தில் புகார் பெற மறுக்கப்பட்டாலும், சமூக ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்களின் தொடர் போராட்டத்தால் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
📰 Related News