Crime
"Please என்னை விட்டுரு... உடலுறவுக்கு வர முடியாது!" கணவனிடம் கெஞ்சிய மனைவி
"Please என்னை விட்டுரு... உடலுறவில் விருப்பமில்லை!" மனைவி கதறிய பதில்... 6 மாதத்தில் தென்காசியில் நடந்த அந்தரங்க மோதல்!

தென்காசி:
தென்காசியில் திருமணமான ஆறே மாதத்தில், கணவன்-மனைவி இடையே எழுந்த அந்தரங்க உடலுறவு பிரச்சனை பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.
6 மாதத்தில் வெடித்த அந்தரங்க மோதல்:
தென்காசி மங்கம்மாள் சாலைப் பகுதியைச் சேர்ந்த சக்தி வீர மணிகண்டன் (32) என்பவருக்கும், அன்னலட்சுமி (24) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. திருமணமான நாள் முதலே இருவருக்கும் இடையே உடலுறவு விவகாரங்களில் அடிக்கடி பிரச்சனைகள் ஏற்பட்டு வந்துள்ளன.
"என்னை விட்டுரு..." கதறிய மனைவி:
கணவர் சக்தி வீர மணிகண்டன் உடலுறவுக்கு அழைக்கும் போதெல்லாம், அதில் விருப்பம் இல்லாத அன்னலட்சுமி "Please என்னை விட்டுரு... முடியாது, எனக்கு ஆர்வம் இல்லை" எனத் தொடர்ந்து கெஞ்சி மறுத்து வந்துள்ளார். மனைவியின் இந்த தொடர் மறுப்பால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்து, தினமும் வாக்குவாதம் நிலவி வந்துள்ளது.
நள்ளிரவில் வெடித்த பிரச்சனை:
கடந்த 26-ம் தேதி நள்ளிரவிலும் இதேபோன்று தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அன்னலட்சுமி ஆத்திரத்தில் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தித் திட்டியதால் நிதானம் இழந்த சக்தி வீர மணிகண்டன், மனைவியைத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அன்னலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
நீதிமன்றத்தில் சரணடைந்த கணவன்:
சம்பவம் நடந்த பிறகு சக்தி வீர மணிகண்டன், தென்காசி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தானாகச் சென்று சரணடைந்தார். இதையடுத்து அங்கு விரைந்து வந்த தென்காசி காவல்துறையினர், அன்னலட்சுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
📰 Related News