Crime
என்னை விட்டுரு... உடலுறவுக்கு வர முடியாது!" 22 வயது பெண்ணுடன் உல்லாசம்...
22 வயது பெண்ணுடன் உல்லாசம்..." உடலுறவின் போது தொழிலதிபருக்கு நேர்ந்த விபரீதம்! ஹோட்டல் அறையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

பெங்களூரு:
பெங்களூரு மாரத்தள்ளி பகுதியைச் சேர்ந்த 59 வயது தொழிலதிபர் ஒருவர், 22 வயது இளம் பெண்ணுடன் ஹோட்டல் அறையில் உல்லாசமாக இருந்தபோது உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொழில் விஷயம் என பொய் சொல்லி கிளம்பிய தொழிலதிபர்:
மாரத்தள்ளியைச் சேர்ந்த தொழிலதிபர் ராமசாமி (59). இவர் சம்பவத்தன்று காலை தனது மனைவி ராஜமாளிடம் "தொழில் விஷயமாக வெளியே செல்கிறேன், வர தாமதமாகும்" எனக் கூறிவிட்டுச் சென்றுள்ளார். ஆனால், இரவு வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. போன் செய்தபோது சுவிட்ச் ஆஃப் என வந்துள்ளது.
22 வயது பெண்ணுடன் ஹோட்டல் அறையில் உல்லாசம்:
ராமசாமி தனது மகளின் வயதுடைய சரிதா (22) என்ற இளம் பெண்ணை சிவலாட்ஜ் என்ற விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அந்தப் பெண்ணுடன் உடலுறவில் ஈடுபடுவதற்காக அதிக அளவிலான வயாகரா மற்றும் போதை மாத்திரைகளை உட்கொண்டுள்ளார்.
உடலுறவின் போது மாரடைப்பு - பரிதாப உயிரிழப்பு:
அளவுக்கு அதிகமான வீரியமிக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு உடலுறவில் ஈடுபட்டபோது, ராமசாமிக்கு திடீரென கடும் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. "ஐயோ நெஞ்சு வலிக்குதே" எனக் கதறிய ராமசாமி, பெண்ணின் கண்ணெதிரே மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி உண்மை:
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அதில், ராமசாமி உயிரிழப்பதற்கு முன்பு பெண்ணுடன் உடலுறவில் ஈடுபட்டதும், அதற்காக அவர் உட்கொண்ட வயாகரா மாத்திரைகளின் வீரியம் தாங்காமல் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததும் உறுதி செய்யப்பட்டது.
விசாரணையில், வறுமை காரணமாகவே அந்த 22 வயது பெண் தவறான தொழிலுக்கு வந்ததாகக் கூறியதையடுத்து, இறந்துபோன ராமசாமியின் மனைவி அந்தப் பெண்ணிற்குத் தனது நிறுவனத்திலேயே வேலை வழங்கி வாழ வழிவகுத்துக் கொடுத்துள்ளார்.
📰 Related News