Note Details

நீதிக்கட்சி - History Old Questions Read Online

Note Image

நீதிக்கட்சி

1. நீதிக்கட்சியின் பிரதிநிதியாக வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டவர் யார்?

  1. அயோத்திதாசர்
  2. A.T.பன்னீர் செல்வம்
  3. மறைமலை அடிகள்
  4. M.C. ராஜா

2. நீதிகட்சி பற்றிய தவறான கூற்றை சுட்டிக் காட்டவும்

i. நீதிக்கட்சியின் முன்னோடி சென்னை ஐக்கிய கழகமாகும்.
ii. 1917ஆம் ஆண்டு தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தோற்றவிக்கப்பட்டது.
iii. ஜஸ்டில் என்ற தமிழ் மொழி பத்திரிக்கையை தென்னிந்திய நல உரிமைச் சங்கம் நடத்தி வந்தது.
iv. 1944ஆம் ஆண்டு நீதிக் கட்சி மாநாடு சேலத்தில் நடைப்பெற்றது.
  1. i மட்டும்
  2. ii மற்றும் iii மட்டும்
  3. i மற்றும் iv மட்டும்
  4. iii மற்றும் iv மட்டும்

3. பட்டியல் Iஐ பட்டியல் IIஉடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு

பட்டியல் I பட்டியல் II
a. நீதிக்கட்சி 1. பெரியார் ஈ.வே. ராமசாமி
b. தேவதாசி முறை 2. டாக்டர் எஸ். தருமாம்பாள்
c. வைக்கம் வீரம் 3. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
d. வீரத்தமிழன்னை 4. தியகராய செட்டியார்

      (a)  (b)  (c)  (d)
A)   4     3    1    2
B)   1     2    3    4
C)   2     4    1    3
D)   4     2    1    3

 

4. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை?

  1. சுயராஜ்யக்கட்சி – C.R.தாஸ்
  2. பார்வர்டு பிளாக் – சுபாஷ் சந்திரபோஸ்
  3. முஸ்லீம் லீக் கட்சி – நவாப் சலிமுல்லாகான்
  4. நீதிக்கட்சி – பெரியார் ஈ.வே.ரா

5. பட்டியல் Iஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் உதவியுடன் சரியான விடையைத் தேர்ந்தெடு

பட்டியல் I பட்டியல் Iஐ
a. வாஞ்சிநாதன் 1. சுதந்திர கட்சி
b. வ.உ.சி 2. வைக்கம் சத்தியாகிரகம்
c. இராஜாஜி 3. சுதேசி கப்பல் கம்பெனி
d. ஈ.வெ.ரா 4. கலெக்டர் ஆஷ்

      (a)  (b)  (c)  (d)
A)   3     1    2    4
B)   4     3    1    2
C)   1     3    4    2
D)   2     1    3    4

 

6. எந்த கட்சியின் ஆட்சியில் முதன் முதலாக  தமிழ்நாட்டில் “இலவச மதிய உணவுத் திட்டம்” அறிமுகப்படுத்தப்பட்டது?

  1. காங்கிரசு
  2. நீதிக்கட்சி
  3. சுயராஜ்ய கட்சி
  4. திராவிட கட்சி

7. நீதிக்கட்சியின் முக்கியமான நோக்கம் எது?

  1. முஸ்லீம் லீக்கிற்கு எதிராகப் போராடுதல்
  2. அரசுப் பணிகளில் பிராமணர் அல்லாதவர்களை பங்கேற்கச் செய்தல்
  3. ஜமின்தார்களின் சர்வாதிகாரத்திலிருந்து விவசாயிகளை காப்பாற்றுதல்
  4. பொதுப் பிரச்சனை பற்றி விவாதி

8. கீழ்க்கண்டவற்றுள் எது உண்மையான கூற்று அல்ல?

  1. சட்ட மேலவையில் நீதிக்கட்சி 98க்கு 63 தேர்தல் இடங்களை வென்றது.
  2. சென்னை மாகாணத்தில் A.சுப்புராயன் முதல் முதலமைச்சராக ஆனார்.
  3. 1919-ம் ஆண்டு சட்டத்தின் அடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது.
  4. 1920-ம் ஆண்டுத் தேர்தலில் நீதிக்கட்சி காங்கிரஸ் கட்சியை முழுமையாக தோற்கடித்தது.

9. சரியான விடையைத்‌ தேர்ந்தெடு

1. மதராஸ்‌ மகாஜனசபா – 1884
2. தென்‌ இந்திய மக்கள்‌ சங்கம்‌ – 1919
3. பிராமணரல்லாதோர்‌ பிரகடனம்‌ – 1916
4. மதராஸ்‌ இலக்கிய சங்கம்‌ – 1880.
  1. 1 மட்டும்‌ சரி.
  2. 2 மட்டும்‌ சரி
  3. 2 மற்றும்‌ 4 சரி
  4. 2 மற்றும்‌ 3 சரி

10. நீதிக் கட்சியை உருவாக்கியவர் (Repeated Question)

  1. டி.எம்.நாயர்
  2. பி.சுப்பராயன்
  3. பி.எஸ்.குமாரசாமி ராஜா
  4. சி.சத்தியமூர்த்தி

11. “திராவிட நாடு” எந்தக் கட்சியின் இதழாக இருந்தது?

  1. திராவிடர் கழகம்
  2. திராவிடர் முன்னேற்ற கழகம்
  3. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்
  4. நீதிக்கட்சி

12. பின்வரும் கூற்றுகளில் சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி சரியானது எது?

  1. சுயமரியாதை இயக்கம் என்பது உயர் சாதி இந்துகளுக்கு எதிரான சமூகப் போராட்டம்
  2. சுயமரியாதை இயக்கம் சமூக சுதந்திரத்தின் மீதே அதிக ஈடுபாடு கொண்டிருந்தது.
  3. சுயமரியாதை இக்கம் பெரும்பாலும் நிலமுள்ள வர்கத்திற்காகவே முறையிட்டது.
  4. சுயமரியாதை அரசியல் சுதந்திரத்தை பெறுவதற்காக தோற்றுவிக்கப்பட்டது.

13. சென்னை மாகாணத்தின் நீதிகட்சியிலிருந்து முதல் அமைச்சராக இருந்தவர்.

  1. பொப்பிலி அரசர்
  2. பனகல் ராஜா
  3. ராஜன்
  4. சுப்பாராயலு

14. பொருத்துக

a. நீதிக்கட்சி 1. ஜோதிராவ் பூலே
b. சுய மரியாதை இயக்கம் 2. சத்திரபதி ஷானு மகாராஜ்
c. சத்திய ஜோதக் இயக்கம் 3. ஈ.வெ.ராமசாமி
d. சத்ய சோதக் சமாஜ் 4. டி.எம்.நாயர்

      (a)  (b)  (c)  (d)
A)   4     3    1    2
B)   3     4    1    2
C)   2     3    4    1
D)   4     3    2    1

 

15. பூண்டி என்னுமிடத்தில் ஓரு குடிநீர்தேக்கத்தை கட்டுவதற்கான திட்டத்தை செயல்படுத்தியவர் யார்,

  1. காமராஜர்
  2. சத்தியமூர்த்தி
  3. இராசகோபாலாச்சரி
  4. அண்ணாதுரை

16. தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய நோக்கம்

  1. தீண்டாமை ஒழித்தல்
  2. சுயமரியாதை திருமணத்தை ஊக்குவித்தல்
  3. தேவதாசி முறை ஒழித்தல்
  4. மேற்கூறிய அனைத்தும்

17. தென்னிந்திய நல உரிமைச் சங்கம் பிற்காலத்தில் கீழ்கண்ட பெயரில் அறியப்பட்டது.

  1. சிப்கோ இயக்கம்
  2. நீதிக்கட்சி
  3. திராவிட இயக்கம்
  4. சுயமரியாதை இயக்கம்

18. தென்னிந்திய விடுதலை இயக்கமானது பின்னாளில் புகழ்மிக்க ___________ அழைக்கப்பட்டது.

  1. நீதிக்கட்சி
  2. திராவிட இயக்கம்
  3. திராவிட கூட்டமைப்பு
  4. சுயமரியாதை இயக்கம்

19. நீதிக்கட்சியால் வெளியிடப்பட்ட தமிழப் பத்திரிக்கையின் பெயரை குறிப்பிடுக

  1. திராவிடன்
  2. குடியரசு
  3. நவசக்தி
  4. விடுதலை

20. 1920ல் தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல் மூலம் _________ தமிழ்நாட்டின் முதலமைச்சரனாவர்.

  1. இராஜா பனகல்
  2. எ.சுப்புராயலு ரெட்டியார்
  3. பி. சுப்புராயன்
  4. பி.முத்துசாமி நாயுடு

21. கீழ்கண்டவற்றுள் எத உண்மையான கூற்று அல்ல?

  1. சட்ட மேலவையில் நீதிக்கட்சி 98க்கு 63 தேர்தல் இடங்களை வென்றது.
  2. சென்னை மகாணத்தில் A.சுப்புராயன் முதல் முதலமைச்ராக ஆனார்.
  3. 1919-ஆம் ஆண்டு சட்டடத்தின் அடிப்படையில் தேர்தல் நடைபெற்றது
  4. 1920-ஆண்டுத் தேர்தலில் நீதிக்கட்சி காங்கிரஸ் கட்சியை முழுமையாக தோற்டித்தது.

22. நீதிக்கட்சியின் முக்கியமான நோக்கம் எது?

  1. மூஸ்லீம் லீக்கிற்கு எதிராகப் பேராடுதல்
  2. அரசுப் பணிகளில் பிராமணர் அல்லாதவர்களை பங்கேற்கச் செய்தல்
  3. ஜமீன்தார்களின் சர்வாதிகாரத்திலிருந்து விவசாயிகளை காப்பாற்றுதல்
  4. பொதுப் பிரச்சனை பற்றி விவாதி

23. சுய மரியாதை இயக்த்தின் எழுச்சியிலும், வளர்ச்சியிலும் இரண்டு கட்டம் உண்டு. இவற்றில் எது சரியானவை

i. பகுத்தறிவுவாதம் ii. நாத்திகம்
  1. i
  2. ii
  3. i மற்றும் ii
  4. எதுவுமில்லை

24. அகில இந்திய முஸ்லீம் லீக் கட்சியானது 1906ம் ஆண்ட எந்த இடத்தில் தொடங்கபட்டது?

  1. அலிகார்
  2. டாக்கா
  3. லக்னோ
  4. லாகூர்

25. பனகல்‌ அமைச்சரவையின்‌ போது தமிழ்நாட்டில்‌ பணியாளர்‌ தேர்வு வாரியம்‌ எந்த ஆண்டு நிறுவப்பட்டது ?

  1. 1916
  2. 1920
  3. 1924
  4. 1923

26. 1944ல்‌ நடைபெற்ற __________ மாநாட்டில்‌ நீதிகட்சி, திராவிடர்‌ கழகமாக மாறியது.

  1. சேலம்‌
  2. நாமக்கல்‌
  3. தர்மபுரி
  4. திருச்சி

27. ஜஸ்டிஸ்‌ கட்சியின்‌ முந்தைய பெயர்‌

  1. மதராஸ்‌ மகாஜன சபை
  2. மதராஸ்‌ நேட்டிவ்‌ அசோசியேஷன்‌
  3. தென்னிந்திய விடுதலை கூட்டமைப்பு
  4. திராவிடர்‌ கழகம்‌

28. சுயராஜ்ய கட்சியை ஆரம்பித்தவர்‌

  1. பாலகங்காதர திலகர்‌
  2. சித்தரஞ்சன்‌ தாஸ்‌ மற்றும்‌ மோதிலால்‌ நேரு
  3. பிபின்‌ சந்திர பால்‌
  4. அன்னி பெசண்ட்‌

29. பொருத்துக

கட்சி/இயக்கம்‌ தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
a. மெட்ராஸ்‌ திராவிட இயக்கம்‌ 1. 1916
b. சுயமரியாதை இயக்கம்‌ 2. 1925
c. தென்னிந்திய தாராளவாதக்‌ கூட்டமைப்பு 3. 1944
d. திராவிடர்‌ கழகம்‌ 4. 1912

      (a)  (b)  (c)  (d)
A)   4     2    1    3
B)   1     2    4    3
C)   4     1    2    3
D)   2     4    1    3

 

30. பின்வருவனவற்றுள்‌ எந்த அரசியல்‌ கட்சி தமிழகத்தில்‌ ஆரம்பக்‌ கல்வியில்‌ இருபாலர்‌ கல்வி முறையை அறிமுகப்படுத்தியது?

  1. திராவிட முன்னேற்ற கழகம்‌
  2. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்‌
  3. திராவிட கழகம்‌
  4. நீதிக்‌ கட்சி

31. முதன்‌ முதலில்‌ நீதிக்கட்சி _________ என்ற பெயரில்‌ அழைக்கப்பட்டது.

  1. தென்னிந்திய இளைஞர்‌ சங்கம்‌
  2. தென்னிந்திய நல உரிமை சங்கம்‌
  3. தென்னிந்திய பத்திரிக்கை நிரூபர்கள்‌ சங்கம்‌
  4. தென்னிந்திய இலக்கிய ஐக்கிய மன்றம்‌

32. தன்னாட்சி இயக்கத்தை நீதிக்கட்சி எதிர்த்து ஏனெனில்‌

  1. அது ஒரு பிராமணர்‌ இயக்கமாக இருந்தது
  2. அது ஒரு ஆங்கில ஆதரவு இயக்கம்‌
  3. அது ஒரு சாதிவாரி இட ஒதுக்கீடு ஆதரவு இயக்கம்‌
  4. அது அடிப்படையில்‌ ஒரு வட இந்திய இயக்கம்‌

பெரியார்

 

1. தமிழகத்தில் சுய மரியாதை இயக்கத்தை துவக்கியவர் யார்?

  1. பி.தியாகராஜர்
  2. ஈ.வெ.இராமசாமி
  3. சி.என்.அண்ணாதுரை
  4. எம்.கருணாநிதி

2. எந்த வருடம் ஈ.வே. இராமசாமி ஈரோடு நகராட்சியின் தலைவராக இருந்தார்?

  1. 1907
  2. 1909
  3. 1917
  4. 1919

3. கீழ்வருவனவற்றுள் ஈ.வெ.ரா பெரியாரை பற்றி எவை உண்மையான கூற்று?

i) காதிவஸ்திராலயத்தை தோற்றுவிக்க காரணமானவர் ஈ.வெ.ரா பெரியார்
ii) நூற்பாலை சங்கத்தலைவராக பணியாற்றியவர் ஈ.வெ.ரா. பெரியார்
iii) மாவட்ட குழுவில் உறுப்பினராக இருந்தார்.
iv) ஈரோடு முனிசிபல் கவுன்சில் தலைவராக இருந்தார்.
  1. (i) மற்றும் (ii) மட்டும்
  2. (i), (ii) மற்றும் (iii) மட்டும்
  3. (ii) மற்றும் (iii) மட்டும்
  4. மேற்கூறிய அனைத்தும்

4. ஈ.வெ. ராமசாமி சுயமரியாதை மாநாட்டில் பெண்களின் நலனுக்காக திட்டங்கள் இயற்றப்பட்ட இடம் (Repeated Question)

  1. மெட்ராஸ்
  2. கோயமுத்தூர்
  3. சேலம்
  4. செங்கல்பட்டு

5. ஈரோட்டில் 1921-ம் ஆண்டு ஈ.வெ.ரா தமிழ்நாட்டில் கள்ளுக்கடை மறியல் பேராட்டம் நடத்தினார். அப்போது இரண்டு பெண்கள்  அவர்களுடன் சேர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவ்விரு பெண்கள் தான் கள்ளுக்கடை மறியல் பேராட்டத்தில் ஈடுபட்டதற்காக முதன் முதலில் கைது செய்யப்பட்டவர்கள் அவர்கள் யார்?

  1. நாகம்மையார் மற்றும் கண்ணம்மாள்
  2. நாகம்மையார் மற்றும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
  3. கண்ணம்மாள் மற்றும முத்துலட்சுமி ரெட்டி
  4. மணியம்மையார் மற்றும் நாகம்மையார்

6. பெரியாருடன் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை கால வரிசைப்படுத்துக

1. வைக்கம் சத்தியாகிரகம்
2. ஒத்துழையாமை இயக்கம்
3. கள்ளுக்கடை மறியல்
4. சென்னை காங்கிரஸ் கமிட்டி தலைவர்
  1. 2, 3, 4, 1
  2. 2, 4, 3, 1
  3. 2, 1, 3, 4
  4. 4, 2, 3, 1

7. ஒரு தனியான, சுதந்திரமாக செயல்படும் திராவிட நாட்டை ஏற்படுத்துவதற்காக பெரியார் திராவிட நாடு மாநாட்டினை ____________ ல் கூட்டினார்?

  1. 1937
  2. 1938
  3. 1939
  4. 1940

8. கீழ்கண்டவற்றுள் தந்தை பெரியாரின் செய்தித்தாள்களையும், இதழ்களையும் கால முறைப்படி வரிசைப்படுத்துக.

1. பகுத்தறிவு 2. விடுதலை
3. குடியரசு 4. புரட்சி
  1. 4, 2, 3, 1
  2. 3, 4, 1, 2
  3. 3, 2, 4, 1
  4. 2, 3, 1, 4

9. பெரியார் ஆதரித்த சுயமரியாதை திருமணங்கள் பற்றிய பின்வரும் சொற்றொடர்களை கவனிக்கவும். சுயமரியாதை திருமணத்தோடு தொடர்பில்லா சொற்றொடரை விளக்கவும்.

  1. பிராமண புரோகிதர் இல்லாது நடத்தப்பட்டது.
  2. எந்த மதச்சார்பு வழக்கங்களும் பின்பற்றப்படவில்லை
  3. அரசுப் பதிவாளர் முன்னிையில் நடைபெற்றது.
  4. மணமகள் மற்றும் மணமகள் உறுதிமொழி எடுத்தக் கொண்டனர்.

10. ஈ.வே.ராவிற்கு _______ ஆம்‌ ஆண்டு சென்னையில்‌ நடைபெற்ற மகளிர்‌ . மாநாட்டில்‌ “பெரியார்‌’ என்ற-பட்டம்‌ வழங்கப்பட்டது.

  1. 1936
  2. 1937
  3. 1938
  4. 1939

11. திராவிட இயக்கம்‌, திராவிடக்‌ கழகத்தை —————— தலைமையில்‌ உருவாக வழி வகுத்தது.

  1. சி.என்‌. அண்ணாதுரை
  2. மு. கருணாநிதி
  3. ஈ.வெ. ராமசாமி
  4. எம்‌.ஜி. ராமச்சந்திரன்‌

12. ஈ.வெ.ரா. பெரியார்‌ சுயமரியாதை இயக்கத்தை ஏன்‌ தொடங்கினார்‌?

  1. சாதி ஒழிப்பிற்காக
  2. சமயங்களை ஒழிப்பதற்காக
  3. பிராமணியத்தினை ஒழிப்பதற்காக
  4. காங்கிரசினை ஒழிப்பதற்காக

13. ஈ.வே.ராமசாமியின்‌ ஈரோட்டு திட்டம்‌ கீழ்கண்டவைகளில்‌ எதை கொண்டிருந்தது?

1. அனைவருக்கும்‌ ஆயுள்‌ காப்பீட்டு திட்டத்தை விரிவுபடுத்துதல்‌
2. அனைவருக்கும்‌ கட்டாய இலவசக்‌ கல்வி அளித்தல்‌
3. தீண்டாமை ஒழிப்பு
4. அத்தியாவசிய தொழில்களை நாட்டுடமை ஆக்குதல்‌
  1. 1 மட்டும்‌
  2. 2 மட்டும்‌
  3. 1, 2 மட்டும்‌
  4. 1, 2, 3, 4

14. காலவரிசைப்படி பட்டியலிடுக :

1: ஈ.வே. ராமசாமி தலைமையில்‌ நீதிக்‌ கட்சி “திராவிடக்‌ கழகம்‌” என மாற்றி அமைக்கப்பட்டது
2. ஈவே. ராமசாமி சிறையில்‌ இருந்துக்‌ கொண்டு நீதிக்‌. கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்‌
3. ஈவே ராமசாமி திராவிட நாடு மாநாடு நடத்தி அதில்‌ சுதந்திர மற்றும்‌ தனி திராவிட நாடு கோரிக்கை முன்‌ வைத்தல்‌
4. மெட்ராஸ்‌ சட்டசபை தேர்தலை காங்கிரஸ்‌ கட்சி வென்றது.
  1. 1 3 2 4
  2. 3 4 1 2
  3. 4 2 3 1
  4. 2 1 3 4

15. “தெற்கிலிருந்து வந்த தீர்க்கதரிசி” என்று சிறப்பாக அழைக்கப்பட்டவர்‌ யார்‌?

  1. இராஜாதி
  2. வ.உ: சிதம்பரம்‌
  3. பெரியார்‌ ஈ.வெ. இராமசாமி
  4. பாரதியார்‌

16. சிறைபறவை என்ற அடைமொழி பெயர்‌ கொண்டு அழைக்கப்பட்டவர்‌ ‘

  1. பெரியார்‌ ஈ.வே. ராமசாமி
  2. பாரதியார்‌
  3. சிவ சுப்பிரமணியம்‌
  4. டி. சுப்புராயன்‌

17. பின்வரும்‌ கூற்று/கள்‌ எது/எவை சரியானது?

கூற்று (A) “திராவிட நாடு” எனும்‌ தமிழ்‌ வார இதழ்‌ பெரியாரால்‌ திராவிட நாடு. என்ற தனி மாநிலக்‌ கருத்தைப்‌ பரப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்டது
காரணம்‌ (R) திராவிட நாடு எனும்‌ காரணத்தை தழுவியதால்‌ தெற்கே உள்ள பிராமணரல்லாதோரை திராவிடன்‌ என்று அடையாளம் காட்ட வழி வகுத்தது
  1. (A) மற்றும்‌ (R) சரி மற்றும்‌ (R) (A)க்கான சரியான விளக்கம்‌
  2. (A) சரி, (R) தவறு
  3. (A) தவறு, (R) சரி
  4. (A) மற்றும்‌ (R) சரி மற்றும்‌ (R) (A)க்கான சரியான விளக்கமல்ல

18. 1925 ஈ.வெ.ராமசாமி காங்கிரஸிலிருந்து விலகியதற்கான காரணம்

1. இவரால்‌ காந்திய கொள்கையை பின்பற்ற முடியவில்லை *
2. காங்கிரஸ் முழுவதுமாக பிராமணத்‌ தலைவர்களின்‌ மேலாதிக்கத்தின்‌ கீழ்‌ இருந்தது.

மேற்காணும் காரணங்களில்‌ எவை சரியான காரணம்‌ என எழுதுக.

  1. 1 மட்டும்
  2. 2 மட்டும்
  3. 1 மற்றும் 2 இரண்டும்‌
  4. 1ம் அல்ல 2ம்‌ அல்ல